பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

xiv

"ஓவற ஊழியஞ் செய்த உன்னதனாம் ஏசு தேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே திறமிருந்துங் கேளாதார் செவியென்ன செவியே!"

"பரந்தே தன் பகைவர் வரப் பருவம் வரு முன்னே கரந்தானைக் காணாத கண்ணென்ன கண்ணே கண்விழித்துக் காண்பார் தங் கண்ணென்ன கண்ணே

கடந்தானைப் பன்னிருவர் கண்டஞ்ச நீர்மேல் நடந்தானை யேத்தாத நாவென்ன நாவே!

இவ்வாறு பாடுகிற சிறப்பில் இளங்கோவடிகளார் செவியையும் கண்ணையும் நாவையுமே பாடப் பாவாணரவர்கள் கையையும் நெஞ்சையும் சேர்த்துப் பாடுகிறார்.

"தண்ணளியுந் தானாகித் தனிநின்ற நிலையைக் கண்ணியதுங் குவியாத கையென்ன கையே கை வீசிச் செல்வார் தங் கையென்ன கையே!

நண்ணியெனை மீட்டருளும் நாதனைநள் ளிரவும் எண்ணியெண்ணி யுருகாத நெஞ்சென்ன நெஞ்சே இடம்பரந்து வல்லென்ற நெஞ்சென்ன நெஞ்சே'

உண்மையிலேயே பாவாணருடைய பாடல்களும் சிலம்பினைப் போலேவே நம்முடைய நெஞ்சையள்ளிக் கொள்கின்றன.

இதனைத்தான் நாம் தன்னாக்கம் செய்தல் (Indigenization) என்கிறோம். கிறித்தவத் தொழுகையில் வாழைப் பழத்தில் ஊதுவர்த்திகளைக் குத்தி வைத்துக் கொள்வதையோ, திருநீற்று வேடம் புனைந்து கொள்வதையோ நாம் தன்னாக்கம் என்று கூறுவதில்லை

இத்தனை ஆண்டுக் காலமாக இத்தனை அரிய இன்றமிழ்ப் பாடல்கள், இயேசுவைப் பாடிய இனிய பாடல்கள் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தனவே என்பதை எண்ணும்போது நெஞ்சு வலிக்கிறது. திருச்சபையில் காணப்பட்ட பொருத்த மில்லாத மேலை நாட்டு வாடைகள் பாவாணர் அவர்களை ஒரு