பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

XV

ஓரத்தில் துரத்திவிட்டனபோலும். அவரோ மொழி யாராய்ச்சி என்னும் கடலில் அரியாசனம் அமைத்துக் கொண்டுவிட்டார்.

பாட்டில்லாத பாட்டுகள் திருச்சபையில் படையெடுத் துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் பாட்டெனும் பாட்டாக இந்த நூல் வெளி வருகின்றது. பாவாணரவர்கள் எக்காலத்திலோ தம்முடைய இளமையில் படைத்து அச் சிட்டிருந்த இந்த நூலின் நலிந்த படி ஒன்று எங்கோ மறைந்து கிடக்க, அதனைத் தேடிக்கொணர்ந்து தமிழுலகிற்கு நல்குகின்ற டாக்டர் வீ. ஞானசிகாமணி அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்ட வேண்டும்; தமிழ்த் திருச்சபை அவருக்கு நன்றி கூறிட வேண்டும். இதுவரை வெளியிடப் படாத மகாகவி கிருஷ்ணப்பிள்ளையவர்களின் அரிய நூல்களை யும் இவர்கள் வெளியிட்டுருக்கிறார்கள், பொருள் வரவு கருதாமல்.

இவ்வாறு அரிய நூல்களை யாதொரு பொருள் வரு வாயையும் கருதாமல் வெளியிடுவதுமன்றி, ஞானசிகாமணி அவர்கள் கிறித்தரசர் தமிழ்ப் பேரவை என்ற அமைப்பின் செயலாளர் பதவியையும் ஏற்றுப் பணிபுரிந்து வருகிறார்கள். கடவுளின் அருள் அவரைச் சூழ்வதாகுக.

வாழ்க பாவாணர் நற்பணி.