பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பட்டினியாய்ப் பசிதாகம் பரந்தெழுந்த தெய்வம் பலமான வாரடியும் பட்டபெருந் தெய்வம். குட்டி மிகு பாதகரும் குறைவுறுத்த தெய்வம் கோரமிகுஞ் சிலுவையிலே கொலையுண்ட தெய்வம். மட்டில் பெரும் பகைவருக்கும் மன்னிப்புரை தெய்வம் மன்னுயிரைத் தன்னுயிர்போல் மதித்த பெருந் [தெய்வம். திட்டியிடச் சோரனுமுன் சிறுமை செய்த தெய்வம் திருடனுக்கும் பெரியபரதீ சளித்த தெய்வம். படமுடியாப் பாடுபட்டே பரிதபித்த தெய்வம் பாவியெனக் காருயிரும் பரிந்தளித்த தெய்வம். சடமுடனே உயிர்த்தெழுந்த சத்தியமாந் தெய்வம் தரிசனமுஞ் சீடருக்குத் தந்த பெருந் தெய்வம். படருமொளி மேகமிசை பரத்தெழுந்த தெய்வம் பரமவலம் வீற்றிருந்து பரிந்துரைக்குந் தெய்வம். திடமுறவே யெனையாண்ட திருக்குமர தெய்வம் திருவருளைச் சிறந்தளிக்கும் திவ்வியமெய்த் தெய்வம். தானாகித் தனியாகித் தழைத்த பெருந் தெய்வம் தனக்கெனவாழாத பெருந் தனிக்கருணைத் தெய்வம் கோனாகிக் குருவாகிக் கூறுவிக்குந் தெய்வம் கொடியனெனை யாளுகந்து கொண்டாடுந் தெய்வம் ஊனாகி யுயிராகி உள்ளமர்ந்த தெய்வம் உடம் பிறப்பு முறையுமெனக்கு வந்தளிக்குந் தெய்வம். தேனாகித் தெளிவாகித் தெவிட்டறியாத் தெய்வம் திருவல மன்றாடுகின்ற தெய்வமதே தெய்வம். 44 நெஞ்சொடு கூறல் புரிகல்யாணி சாப்பு ஏசு தேவனே இந்நிலத்தார் பலர் ஏசு மேழையாய் இன்னுயிர் ஈந்ததால் நீச நாயன நீயும் பின் பேரின்ப வாசனான வகை நினை மனமே.