பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

24
'பாலாபிஷேகப் பழனி' என்ற மெட்டு..
பல்லவி
தாவீது ராஜகுமார கெம்பீரநீ தந்த பவனித் தரிசனமே
கோவேறுமாகழுதை வாகனாரூடகும்பிடவந்தேம் பரிசனமே
தொகையறா
தேவாதி தேவன் பெருந் திரு நாமத்தால் வரும்.
மூவாத ஏசு பெறும் முரு கோலைச்சாமரம்.
முடுகியல்
உடைகிளை விரித்தவ ரோசனாபாட
மிடைதர நெரித்திடு மிகுசனங் கூடச்
பல்லவி யெடுப்பு
சாலேமின் ராஜாநற் சாந்தகுணச் செல்வன்
சாரி செய்து சாலேம் மாநகர்க்கே
கோலாகலத்துடன் கூடவருவதைக்
கூறுவேம் சீயோன் குமாரத்திக்கே
தொகையறா
தேவாலயத்திற்குள் வியாபாரம் நீக்கி
நோவாருக்குச் சொஸ்தம் மேவார வாக்கி
முடுகியல்
பாலகர் ஓசனா பகரவும் வேத
பாரகர் மாசினம் மிகுதியு மோத
பல்லவி யெடுப்பு
பாலகர் வாயிற் பரமானந் தத்துதிபாரு மென்ற மெய்ப்
பராபரனே (தா)

 

25
அத்திமரத்தைச் சபித்தது.
தென்மாங்கு.

1அத்திமரத்துக் கிளி-மிக
அழகழ காய்ப் பேசுங்கிளி
தித்திக்கும் செங்கனியை - அது
தேடிப்பார்த்துங் காணவில்லை