பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

2அத்திமரத்தினிலே-மிக
அழகான பல இலைகள்
எத்திவஞ்சித்ததினால்- கிளி
இட்ட சாபம் பட்டது பார்

3அத்திமரம் படவே-கிளி
அயன்மரக் கிளை யடைந்து
மெத்த மதுரமுள்ள-கனி
மிகவுண்டு களித்ததுவே

4அத்திமரந் தளிர்க்கும் - அதை
அறிகுவீர் வசந்தகாலம்
இத்தரையின் முடிவும்-உடன்
எட்டிவரும் பைங்கிளியே


 

கிறிஸ்துவின் பாடுகள்.


கிறிஸ்துவின் ஜீவியம் முழுவதிலும் அவருடைய பாடு களே பாவிகட்குப் பிரதானமாகும். பாடில்லாமற் பலனில்லை என்றபடி கிறிஸ்துவின் பாடுகளில்லாவிடிற் பாவிகட்கு மீட் பில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன் மீட்புக்குக் காரணமான கிறிஸ்துவின் பாடுகளையே இரவும் பகலும் எண்ணித் தியானித்தல் வேண்டும். இதே நோக்கத்துடன் கிறிஸ்துவின் பாடுக ளெல்லாம் இங்கு குறைவறப் பாடப்பட்டிருக்கின்றன. கிறிஸ்து மார்க்க சாரமான அன்பு (Love) ஊழியம், (Service) தியாகம் (Sacrifice) என்னும் மூன்றும் சிலுவைப் பாடுகளிலேயே ஒருங்கு திரண்டு கிடக்கின்றன. கிறிஸ்துவின் தெய்வீகத்தையே நம்பாத காந்தியுங்கூடச் சிலுவைத் தியானத்தினால் உலக முழுதும் நடுங்கத்தக்க வண்ணம் மேற்கூறிய மூன்று சக்திகளையும் பெற்றிருப்பாராயின், கிறிஸ்துவையே மெய்த்தேவனென்று வணங்குங் கிறிஸ்தவர்கள் அவரிலும் எத்துணையோ அதிகமாய் அச்சக்திகளை யடையலா மென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?