பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

பண்டிகையுற வந்தவ ரேவலால்
பரபா சை விட வென்று கேட்டார்-ஏசு
பரமனை யறையவே வேட்டார்-அந்தப்
பாமரக்குழு படியப் பொந்தியு
தானடக்கவு முடிதற்கின்றெனப்
பங்கு நானிலை இந்த மகான்பழி
பாருமென்றே மண்ணிக் காட்டும்- அந்தப்
பழியெங்கள் வழியென்னுங் கூட்டம்.

அந்த நேரமே பொந்தியு வாணையில்
அரிய கள்ளன் சிறை வீடு-தேவ
மறியின் சிலுவையிற்பாடு-உடன்
அரமனைப்படை வீரர் யாவரும்
இருதிறப்பட மேவி யேசுவின்
அங்கவாடை விலங்கவே சேயுடை
அணிந்து முன்முடி தலை மேலே-கரம்
அளித்தொரு மூங்கிற் செங்கோலே

முன்பு யூதமன் வந்தனம் வாழ்கென
முழங்காற் படியிட்டு வாழ்த்தி - அவர்
முகந்தனில் உமிழ்நீரை வீழ்த்திக் கர
மூங்கிலாலவர் சிரமறைந்துடன்
வாங்கு சேயுடையது பகிர்ந்தபின்
முந்தையாடை யணிந்துடனேகினர்
முதுகாடு தான் கொல்கதாவே- பின்பு
மொழிய வரவில்லை நாவே.

 

30
ஏசுவானவர் சிலுவையைச் சுமந்தேகினது.
'இராகம் - செஞ்சுடி.தாளம் - சாப்பு.
கண்ணிகள்

சிலுவை சுமந்திதோ செல்கிறார் சாமியே
கொலுவை நினைந் தொரு கொல்கதாப் பூமியே

கட்டியங்காரனுங் காரணங் கூறவும்
திட்டியே சேவகர் தீவிரஞ் சேரவும்

-