பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

பாரிலுள்ளோர் செய்த பாவங்கள் யாவுமே
பாரமாக எய்தப் பாரித்த நோவுமே

ஆகார முண்ணாமல் ஆவி யொடுங்கவும்
தேகமோ புண்களால் தேங்கி நடுங்கவும்

நித்திரை யில்லாமல் நியாயம் விசாரித்துக்
கட்டியே கண்களும் காந்தி யெரிவுற்று

வையமெய் பேயுடன் வாகை மல்லாடியே
கையயர்ந்து பின்னே கால்கள் தள்ளாடியே

கேடுகெட்டபவக் கேளைத்தழுவுறப்
பாடுபட்டே வரும் பாரச் சிலுவையைத்

தாங்க முடியாமல் தஞ்சமே வீழவும்
ஆங்கொரு சீமோனை அன்றினர் ஆளவும்

கல்வாரி மாமலை கண்டு சமீபமே
கொல்வாரே கோதில்லாக் குன்றை என் பாவமே

 

31
ஏசுவைச் சிலுவையி லறைந்தது.
'திருவுற்றிலது கங்கை' என்ற மெட்டு.

அமரச் சேவகரேசு குமரக்கடவுளானை
அறையச் சிலுவை யோடு சென்றனர் - அந்தப்
பொறையைச் சீமனதாகு மென்றனர் -களி
ஆடு கூளிகள் பல்கிமேவுக
பால மேநிறை கொல் கதாவிடம்
அடையக் கசந்த கள்ளைத் தந்தனர்- கொள்ளப்
பரமற் கிருந்ததில்லை சிந்தையே

குருசிற்பெரிய வாணி யுருவப் பரமனேசு
குருவைக் கையொடு காலறைந்தனர்-அவர்
உடையைப் பகிரவே விரைந்தனர் - அந்தக்
கோதிலாதகு மரனை யன்றிவர்
யூத காவல னென வரைந்ததைக்
குருசிற்சிறந்த மிசை மாட்டினர்—ஏசு
குரிசிற் புரிந்த பிழை காட்டினர்