பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

படமுடியாப் பாடுபட்டே பரிதபித்த தெய்வம்
பாவியெனக் காருயிரும் பரிந்தளித்த தெய்வம்

சடமுடனே உயிர்த்தெழுந்த சத்தியமாந் தெய்வம்
தரிசனமுஞ் சீடருக்குத் தந்த பெருந் தெய்வம்

படருமொளி மேகமிசை பரத்தெழுந்த தெய்வம்
பாமவலம் வீற்றிருந்து பரிந்துரைக்குந் தெய்வம்

திடமுறவே யெனையாண்ட திருக்குமர தெய்வம்
திருவருளைச் சிறந்தளிக்கும் திவ்வியமெய்த் தெய்வம்.

தானாகித் தனியாகித் தழைத்த பெருந் தெய்வம்
தனக் கெனவாழாத பெருந் தனிக்கருணைத் தெய்வம்

கோனாகிக் குருவாகிக் கூறுவிக்குந் தெய்வம்
கொடியனெனை யாளுகந்து கொண்டாடுந் தெய்வம்

ஊனாகி யுயிராகி உள்ளமர்ந்த தெய்வம்
உடம் பிறப்பு முறையுமெனக்கு வந்தளிக்குந் தெய்வம்

தேனாகித் தெளிவாகித் தெவிட்டறியாத் தெய்வம்
திருவலமன்றாடுகின்ற தெய்வமதே தெய்வம்.

 

44
நெஞ்சொடு கூறல்.
பூரிகல்யாணி - சாப்பு

44

ஏசு தேவனே இந்நிலத்தார் பலர்
ஏசு மேழையாய் இன்னுயிர் ஈந்ததால்
நீச நாயன நீயும் பின் பேரின்ப
வாசனான வகை நினை மனமே

பாடுபட்டிரும் பாரச்சிலுவையிற்
கூடுவிட்டிகங் குலையுவுங் கோமகன்
கேடுகெட்டறக் கீழான வுன்னையும்
வீடு விட்ட விதம் தெரிமனமே

காவுபாரத்தைக் கடிதிலகற்றியே
தாவம் நீடுயிர்த் தண்ணீரி லாற்றுவென்
பாவி காளெனப் பரிந்தழைக்கும் பரன்
ஆவலெண்ணியும் அறிதியோ மனமே