பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விசேடங்களில் இரண்டு உணவு தயாரிப்பு இல்லை —ஒரே வகை உணவு —ஒரே பந்தி,

காவிரி பிரச்சனையும் நானும்

நான் காவேரிக்கரையில் பிறந்து வளர்ந்தவன். அதனால் நன்றாய் நீச்சல் தெரியும். ஒருநாள் நீந்திக் கொண்டிருந்தபோது வெள்ளம் கொஞ்சம் அதிகம் இருந்தது. அடுத்தநாள் ஆடி அமாவாசையானதால் காவேரி பூவும் புனலும் நுங்கும் நுரையுமாய் ஒடிக்கொண்டிருந்தாள். நான் பாதி நீந்திக் கொண்டிருந்தபோது என்னையும் அவள் அடித்துக் கொண்டு போய்விட்டாள்.

ஆனால் காவேரி மிகவும் நல்லவள். அவளிடம் ஒரு நல்ல குணம் என்னவென்றால், அவள் நம்புகிறவர்களை அழிக்க மாட்டாள். அதற்காகவே நிறைய மரங்கள் காவேரியின் கரையில் கவிழ்ந்து நமக்குக் கைகொடுக்கக் காத்திருக்கும். அதுபோலத் தாழ்ந்திருந்த ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக் கொண்டு நானும் ஜாக்கிரதையாய்க் கரையில் ஏறிக்கொண்டேன். பிறகு காவேரியைப் பார்த்து மெல்லக் கேட்டேன். "ஆமாம். உனக்கு ஏன் இத்தனை அவசரம்? கொஞ்சம் மெதுவாய்த்தான் போவதற்கென்ன?” என்றேன்.

அதற்குக் காவேரியன்னை சற்றும் தயங்காமல் பதில் சொன்னாள். “நாளைக்கு ஆடி அமாவாசை நிறையப் பாவிகள் தங்கள் பாவங்களைக் கழுவுவதற்காக என்னிடம் நீராட வருவார்கள். அவர்கள் வந்து விடுவதற்குள் தப்பித்து ஒடுவதற்காகத்தான் இத்தனை வேகமாய்ப் போகிறேன்.”