பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

41


இளஞ்சூடு ஆமைக்கு இதமா இருக்கும்.
ஆனால்...

ற்றோரத்துச் சிற்றுார் ஒன்று. அந்த ஊரில் உள்ளவர்கள் ஆமை சமைத்துச் சாப்பிடும் பழக்கமுடைய வர்கள். அடுப்பு மூட்டி உலைப்பானை வைத்து அதில் ஆமை ஒன்றை வேகவைக்க இருக்கின்றான் ஒருவன். ചങ്ങാ பானையில் உள்ள நீர் இளஞ்சூடு அடைகிறது. அந்த இளஞ்சூடு ஆமைக்கு இதமாக இருக்கிறது. அடுப்போ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. என்னாகும்; உலைத் தண்ணிர் கொதி நிலை மாறி ஆமை அழிய நேரிடும். ஆனால் ஆமை எதிர் வரும் துன்பம் அறியாமல் கிடைத்த இன்பத்தில் மகிழ்ந்து விளையாடுகிறது. அதுபோல மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கையில் கிடைத்த பணம், பதவி, அதிகாரம் இவைகளைச் சதம் என்று எண்ணி இறுமாந்து நடக்கின்றனர். பின்னர் அவர்களின் மகிழ்ச்சிக்குரிய வாயிலாக அமைந்தவையே இறுதிக்கும் காரணமாதலை அறிக.

எது முக்கியம்?

ர் ஊரில் ஒருவனுக்கு விவசாயம் செய்யவேண்டும் என்று திடீர் ஆர்வம் ஏற்பட்டது. முன் பின் அனுபவம் இல்லாதவன். இருந்தாலும் சிரமப்பட்டுத் தன் நிலத்தைக் கொத்திச் சீர் செய்தான். நன்றாய் உழுதான். நிறையத் தண்ணிர் பாய்ச்சினான். பாத்தி கட்டினான். எல்லா வற்றையும் முடித்துவிட்டுப் போய் நிம்மதியாய்ப் படுத்துத் துரங்கி விட்டான்.

கொஞ்ச நாட்கள் கழித்துப் பார்த்தால் பக்கத்து நிலத்தில் அருமையாய்ப் பயிர் விளைந்திருந்தது. ஆனால் இவன் நிலத்தில் மட்டும் எதுவும் விளையவே இல்லை.

கு.XVI.4