230 கு று ங் .ெ தா ைக க்
237. அளியும் கிளியும்
“புறப்படு” என்றாள் தோழி.
“எங்கே ?’ என்றாள் அவள்.
‘உன்னை அழைத்துக் கொண்டு போய் மணம் செய்து கொள்ளப் போகிறார் உன் காதலர்’
- அப்படியா ?”
“ஆமாம் ! பாலே கிலத்திலே காற்று வீசும். வாகை நெற்று ஒலிக்கும். சிலம்பு ஒலி போல. அவர் கை பற்றி அவ்வழியே செல்வாய்!’’
அத்த வாகை அமலே வால் நெற்று, அரி. ஆர் சிலம்பின், அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம் செல்வாம்-தோழி!-நல்கினர் நமரே.
-குடவாயிற் கீரத்தனர்
238. பாலையும் எருதும்
‘பொருள் தேடப் போகிறேன்” என்றான் அவன். கேட் டாள் தோழி. அவள் கண் முன் தோன்றியது எது? பாலை நிலம், நல்ல வெயில் நேரம். பசு ஒன்று மேய்கிறது. அதைக் கண்டு பெருமூச்சு விடுகிறது எருது. எங்கே? உகாய் மர நிழலிலே கின்று கொண்டு.
‘பசுவை எண்ணி, எண்ணி எருது பெருமூச்சு விடுவது போல நீயும் அவளே எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு. பாலை வழிச் செல்லப் போகிருயா ? அதுதான் இனிமையாயிருக் கிறதா ?’ என்று கேட்டாள் அவள்.
கண்ணி மருப்பின் அண்ணல் கல் ஏறு, செங் காற் பதவின் வார் குரல் கறிக்கும் மடக் கண் மரையா நோக்கி, வெய்துற்று, புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும்