284 கு று க் .ெ த ைக க்
“நம்பாமல் என்ன செய்வது ?”
அப்புறம் ?”
‘அப்புறம் என்ன ? இப்போது அவள் கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை. கில் என்றால் கிற்கிருன். செல்’ என்றால் செல்கிருன். பொம்மலாட்டத்திலே ஆடும் பொம்மை மாதிரி இருக்கிருன். அவள் ஆட்டிவைக்கும் பொம்மை பொம்மையடி பொம்மை !’ -
‘எவள் ஆட்டி வைக்கிருள் அந்த மாதிரி ?”
‘தாலி கட்டிய பெண்டர்ட்டி!’
கழனி மாத்து விளைந்துகு தீம் பழம்
பழன வாளே கது உம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறி, தம்மில்
கையுங் காலும் தாக்க, தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே.
-ஆலங்குடி வங்களுர்
296. குதிரை வண்டியும் குழந்தை இன்பமும்
“பெரியவர்கள் என்ன செய்கிறார்கள்? குதிரை வண்டி யிலே சவாரி செய்கிறார்கள். அதேமாதிரி குதிரை வண்டி சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசை குழந்தைகளுக்கு. என்ன செய் கிறார்கள் ? குதிரை வண்டியிலா சவாரி செய்கிறார்கள். இல்லை, சிறிய வண்டியும் குதிரையும் செய்து கொடுக்கிருன் தச்சன் அந்த வண்டியிலே கயிறு கட்டி இழுத்துக் கொண்டு ஒடுகிறார்கள் சிறுவர்கள். குதிரை வண்டியிலே சவாரி செய்தது போல ஆனந்த மடைகிறார்கள், ள்ன்றாள் தோழி.
‘அந்த மாதிரி ?’ என்று நீட்டினன் பாணன். “அந்த மாதிரி அந்த ஆடல் மகளிர் அவரிடம் இன்பம் பெறு கின்றனர். அவளோ சிறுவர்கள் தச்சன் செய்த குதிரை வண் டியை இழுத்து இன்புறுவது போல இன்பமடைகிருள்.”
“அது எப்படி ?”