286 கு று ங் தொ ைக க்
“நிஜமாகவா ? இப்படித்தான் எல்லாரும் பல முறை கூறி னர். அவர் வரவேயில்லை’
‘இல்லை. இப்போது திசம்’
மெய்யாகவா ? நீ பார்த்தாயோ?”
ஆம். பார்த்தேன்’
‘யாராவது சொல்லக் கேட்டியோ ?”
‘இல்லை ; இல்லை’
- உண்மையைச் சொல்’’
‘உண்மைதானம்மா’’
“அப்படியா! உனக்குச் செல்வம் பெருகுவதாக. சோணே யாற்றின் கரையிலே பாடலி என்று ஒர் நகரமுளது. மகத நாட் டின் தலைநகர். அங்கே பொன்னுக்குப் பஞ்சமேயில்லை. கொழிக் கிறது, அந்த நகரத்தையே உனக்குப் பரிசு வழங்குவேன்.”
நீ கண்டனையோ? கண்டோர்க் கேட்டனையோ? - ஒன்று தெளிய கசையினம்; மொழிமோ! வெண் கோட்டு யானே சோணை படியும் பொன் மலி பாடலி பெறீஇயர் - யார்வாய்க் கேட்டனே, காதலர் வரவே?
-படுமரத்து மோசிகீரனர்
298. முறிந்த யாழும் உடைந்த மனமும்
ஆடல் மகளிர் வீட்டிலே தங்கியிருந்தான் அவன். நீண்ட நாள் தங்கிவிட்டான். பின்னே ஒரு நாள் மனைவியை எண்ணி ன்ை ; வீடு வந்தான். வந்த போது ஊடல் கொண்டாள் அவள். அவளது ஊடல் தணிக்க முயன்றான்.
நல்ல வார்த்தை சொன்னன்; சிரித்தான்; பாடினன்; ஆடி ன்ை ; விளையாடினன் ; கொஞ்சின்ை. ஏதும் பயன் தரவில்லை.
“ஊம்’ என்று பெருமூச்சு விட்டான். ‘நெஞ்சே! இனி என்ன இருக்கிறது? இவள் வேறுபட்டு கிற்கிருள். நான் என்ன செய்வேன். கொல்லேயிலே மலர்ந்த