க்ா ட் சி க ள் 287
முல்லே சூடிய கூந்தலாள் கோபிக்கிருள். என்ன செய்வேன் ! யாழ் முறிந்த பாணன் போல் ஆகிவிட்டேனே !’
எவ்வி என்று ஒருவன் இருந்தான். உழுவித்து உண்ணும் வேளாளன். பாணர்களுக்குப் பொற்பூ அளித்து ஆதரித்தான். அந்த எவ்வி இறந்தான். பாணர் எப்படி ஆனர்கள் ? வறியவர் ஆனர்கள். அந்த மாதிரி நானும் வறியவன் ஆனேன்.
படுமனமே 1 படு! துன்பப்படு ! வருத்தப்படு வேறு என்ன இருக்கிறது உனக்கு?’ என்று புலம்பினன்.
எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர் பூ இல் வறுங்தலே போல, புல்லென்று இனமதி வாழிய நெஞ்சே! மனே மரத்து எல் உறு மெளவல் காறும் பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே!
-பரனா
299. விழாவும் விழைவும்
காதலன் விஷயத்திலே பெண்களுக்குள் சண்டை ஏற்படு வது ஏனே தெரியவில்லை. நீண்ட காலமாகவே இந்தச் சண்டை இருந்து வருகிறது.
ஆடல் மகள் ஒருத்தி மீது ஆசை வைத்தான் அவன். சில காலம் மகிழ்ந்தான். பிறகு திரும்பி வந்தான் மனேவியிடத்தே.
“என்பால் வந்த காதலனைப் பிடித்து இழுத்துக் கொண் டாள்’ என்று ஏசிள்ை ஆடல் மகள்.
“அடியே! சும்மா இரு ! துண்ங்கை விழாவும், மள்ளர் போரும் விரைவில் வருகின்றன. அப்போது தெரியுமடி யார் மீது யாருக்கு ஆசை என்பது” என்று சீறிள்ை மனேவி.
துணங்கை விழாவின் போது ஆடவர் தாம் விரும்பிய மகளி ருடன் கைகோத்து ஆடுவது வழக்கம். அப்போது தெரியும் என்பது கருத்து.