கா ட் சி க ள் 53
‘கலியாணத்துக்கு”
‘எவருக்கும் எவருக்கும் ?”
‘உனக்கும் உன் காதலனுக்கும்!” கேட்டாள் அவள்; துள் வரிள்ை; தோழியை ஒரே கட்டாகக் கட்டிக் கொண்டாள்.
‘பலாப் பழம் நிறைய இருக்கிறது அவனது மலே நாட்டிலே. இனி, நீயும் அவனும் வேண்டிய மட்டும் பலாச் சுளே தின்னலாம். இனிய பலா. தித்திக்கும் பலா. இன்பப் பலா!’ என்றாள் தோழி.
போடி கேலி செய்கிறாய்” என்று கூறித் தோழியின் கன் னத்தைத் தடவினுள் அவள். அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப் பெரும் பெயர் உலகம் பெறி இயரேர், அன்னை - தம் இல் தமது உண்டன்ன சினதொறும் தீம் பழம் தூங்கும் பலவின் ஓங்கு மலே நாடனே, வரும் என்றாேளே !
-வெண்பூதன்
27. மறுகால் பயிரும் மன்மத பாணமும்
‘போய் வருகிறேன்” என்றான் அவன். அவளால் பதில் பேச முடியவில்லே. துக்கம் தொண்டையை அடைத்தது. கண் களில் நீர் பெருகிற்று.
‘கண்ணே ! வருந்தாதே’ என்றான் ; கட்டியணேத்தான் ; கண்ணிரைத் துடைத்தான்; கூந்தலைக் கோதினன்.
- விரைவில் வருவேன்; விடை கொடு’ என்றான். போய் வா’ என்றாள். கா தழு தழுத்தது. நாட்கள் பல சென்றன. வருவான் வருவான்’ என்று ஒவ் வொரு நாளும் எதிர்பார்த்தாள். பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்தன.
தொலைவிலே ஒரு தினைப்புனம். தினே முற்றியது. கதிரை அரிந்தான் குறவன். ஒரு கால் பயன் பெற்றான். மறு கால் விட் டது தினே. மறு காலில் மொச்சை விதைத்திருந்தான். அந்த