பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

அகச்சிவப்புக் கதிர்கள் - அச்சடித்தல்

முடக்குவாதத்துக்கு அகச்சிவப்புக் கதிர் சிகிச்சை

அகச்சிவப்புக் கதிர்கள் - அச்சடித்தல் அகச்சிவப்புக் கதிர்கள் (Infra red rays) : சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்கள் வருகின்றன. இந்த ஒளிக்கதிர்களின் உதவி யால்தான் நாம் பொருள்களைப் பார்க் கிறோம். இந்தக் கதிர்களோடு, கண்ணிற் குத் தெரியாத வேறு பல கதிர்களும் சூரியனிடமிருந்து வருகின்றன. அவற்றுள் ஒருவகைக் கதிர்கள் வெப்பத்தைத் தரு கின்றன. இவற்றை அகச்சிவப்புக் கதிர்கள் என்று சொல்கிறோம். சூரியன் மட்டுமல்ல; சூடாக இருக்கும் எல்லாப் பொருள்களும் அகச்சிவப்புக் கதிர்களை வெளிவிடுகின்றன.

இக்கதிர்கள் வேறு பொருள்களின் மீது படும்பொழுது அப்பொருள்களில் சூடேறுகின்றது. சுறுப்பு நிறமுள்ள பொருள்கள் பளபனப்பான பொருள்களை விட நன்றாக அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சிக்கொள்ளுகின்றன. ஆகையால் அவை விரைவில் சூடாகிவிடுகின்றன. வெயிலில் கிடக்கும் பொருள்கள் சூடாகி விடுவதற்குக் காரணம் அகச்சிவப்புக் கதிர்களே ஆகும். போட்டோ உள்ள போட்டோ எடுப்பதற்கு ஒனி தேவை. ஆனால், அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத்தி இருட்டிலும் எடுக்கலாம். மிகத் தொலைவில் நட்சத்திரங்களையும், மூடுபனியில் மறைந் துள்ள பொருள்களையும் தெளிவாகப் போட்டோ எடுக்க இக்கதிர்கள் பயன்படு கின்றன. வானத்தில் இருந்து பூமியைப் படம் எடுக்கவும் இவை உதவுகின்றன. அகச்சிவப்புக் கதிர்களைக் கொண்டு போட்டோஎடுக்கத் தனிவகையான பிலிம் வேண்டும். முடக்குவாதம் போன்ற நோய்களின் மருத்துவத்திற்கும் இக்கதிர்களைப் பயன் படுத்துகிறார்கள். அகச்சிவப்புக் கதிர்களைப் பயன்படுத் தும் ஒருவகைத் தொலைநோக்கி (டெலிஸ் கோப்பு) ராணுவத்திற்கு மிகவும் உதவி யாக இருக்கிறது. பகைவர்களின் துப்பாக்கி களின் சூடான முனைகளிலிருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்கள் இந்தத் தொலை நோக்கியில் சில மாற்றங்களைக் காட்டும். அவற்றிலிருந்து பகைவர்களின் இருப்பிடத் தைத் தெரிந்துகொள்வார்கள். அச்சடித்தல்: சுமார் முந்நூறு ஆண்டு களுக்கு முன் இந்தியாவில் ஒரு புத்தகம் எவ்வாறு இருந்தது தெரியுமா? அது ஓலைச்சுவடியாகவே இருந்தது. இக்காலத் திலுங்கூட ஓலைச்சுவடிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். பனையோலைகளின்மேல் எழுத்தாணியைக் கொண்டு எழுதி அவற்றை ஒரு கவடியாகச் செய்தார்கள். எழுத்தாணியால் எழுதி ஒரு தூலுக்குப் பல பிரதிகள் எடுப்பது எளி தல்ல. அச்சு எந்திரம் தோன்றிய பிறகு ஆயிரக்கணக்கில் பிரதிகள் எடுக்க வசதி ஏற்பட்டது. LIGA காசு ஒன்றை பத்து வெள்ளைக் காகிதத்தின் அடியில் வைத்து உங்கள் பென்சிலின் பின்பக்கத்தால் தேய்த்துப்பாருங்கள். காசின் உருவம் காகி தத்தின்மேல் விழுவதைக் காண்பீர்கள். ஏன் தெரியுமா? காசின்மேலுள்ள எழுத்து, எண், உருவம் எல்லாம் மேடாக இருக் கின்றன. மற்றப் பாகம் தாழ்ந்திருக் கிறது. அதனால் பென்சிலைத் தேய்க் கும்பொழுது மேடான பாகத்தில்தான் பென்சில் படுகிறது. காசின் உருவம் காகிதத்தில் விழுகின்றது. இப் பொழுது இன்னொன்றும் செய்யலாம். கோப்புச் சட்டம்