ஒரி 33
வல்வில் ஒளி வரையாது வழங்கும் வள்ளியோன வன்; தன்பால் பரிசில் வேண்டி வந்தாரை வறிதே அனுப்பியறியான் அவன்; அவன் அன்னனுகவே, அவன் பால் பொருள் வேண்டிச் சென்ருருள் யாரேனும் எக்கார ணத்தாலோ பொருள் பெருராயின், அவர், அவன்பால் பரிசில் பெறலாகாத் தம் ஆகூழ் இன்மையினேப் பழிப்பதே யல்லாமல், அதுகுறித்து அவனைப் பழித்தறியார் எனக் ஆறி, அவன் வண்மையினே வாயா வாழ்த்தியுளார் கழை
ன்யானேயார் : -
"புள்ளும், பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்ருேர்ப் பழியலர்: அகல்ை புலவேன் வாழியர் ஒரி! விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய் கின்னே.”
- (புறம் : உசே) ஒரிபால் மற்ருேர் உயர் குணமும் ஒன்றியிருந்து அவன் உயர் புகழிற்குக் காரணமாயது; அறிவு உரு கிரு வான் கிறைந்த ஆன்ருேர், தம்மைத் தம் முன்னரே பிறர் புகழ்ந்துரைத்தலைப் பொருர்; அவர் புகழ்வன கேட்கப் பெரிதும் உளம் நானுவர்; இக் காண்மே அவர்க்கு நல்ல தோர் அணிகலமாம்; சான்ருேர், புகழும் முன்னர் நானுப” (குறுங் : உடுஉ); தம்புகழ் கேட்டார் போல் தலைசாய்த்து மரம்,துஞ்ச” (கலி : க.க.கூ) எனக் கூறுதல். காண்க. இச் சீரிய பண்பு வல்வில்ஓரிபாலும் சிறந்து விளங்கிற்று, ஒரியின் வில்லாற்றலே நேரிற் கண்டு களித்த வர் வன்பரணர்; வன்பரணர் காடு பல சுற்றியவர்; தாம் சென்ற நாடுகளில் யாண்டும், இவனே யொத்த வில்லாளர் இன்மையறிந்த அவர், அவனே வியந்து பாராட்டச் சொல்லெடுத்தார்; அவர் கூறும் புகழுரைகளேக் கேட்க நாணிற்று அவன் உள்ளம்; ஆகவே, அவர் மேலும் சொல் லாடாவாறு இடைபுக்குத் தடுத்து விட்டான்; என்னே அவன் பண்பு நலம்!