பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

305

இலை : கூட்டிலை, சிற்றிலைகள் அகன்று நீண்டிருக்கும் (1-2" X .5-.75") விளிம்பு மேற்புறமாக வளைந்திருக்கும். இலைக் காம்பின் நடுநரம்பிற்கு அடியிலுள்ளது மிகப் பெரியது. அடிப்புறத்தில் மென்மையான வெள்ளிய நுண் மயிர்கள் உள்ளன. அதனால் வெண்ணிறம் போலத் தோன்றும்.
மஞ்சரி : கிளை நுனியில் இலைக்கோணத்தில் கொத்தாகப் பூக்கும். இதன் இணரை ‘ஹெட்’ என்பர். மஞ்சரிக் காம்பு உள்ளது.
மலர் : பளபளப்பானது. மங்கிய வெண்ணிறமானது. மலரடிச் செதில்கள் 2 உள்ளன.
புல்லி வட்டம் : புனல் வடிவானது. மேற்புறத்தில் 5 பிளவுகளை உடையது.
அல்லி வட்டம் : புனல் வடிவானது. 5 அகவிதழ்கள் பிரிந்தவை.
மகரந்த வட்டம் : எண்ணற்ற மிக நீண்ட பசுமையான தாதிழைகள் அடியில் ஒரு கொத்தாக இணைந்திருக்கும். பூத்த மலரில் இவை அகலமாக விரிந்து பட்டிழைகள் போன்று அழகாகக் காணப்படும். நுனியில் சிறிய மகரந்தப் பைகளை உடையன. மெல்லிய நறுமணம் வீசும்.
சூலக வட்டம் : ஓரறைச் சூலக அறையில் பல சூல்கள் உண்டாகும்.
கனி : இதன் காய் நீளமானது. பட்டையானது. பசுமையானது. முற்றிய நெற்று வெள்ளிய வைக்கோல் நிறமானது. இலைகள் உலர்நத பின் நெற்றுகள் மட்டும் இருக்கும்.

இதன் பட்டையும், மரமும் கரும் பழுப்பு நிறமானவை. மரம் வலியது. பலகை கட்டடங்களுக்குப் பயன்படும்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n=26 என பட்டீல் ஆர்.பி (1958) கணித்துள்ளார்.

 

73-20