பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கருவாகை
என்டெரலோபியம் சமான் (Enterolobium saman,Prain.)

கருவாகை இலக்கியம்

புலவர்கள் வாகைக்குக் கூறும் ‘அத்தவாகை’, ‘கடவுள் வாகை’ என்பனவும், மலருக்குக் கூறும் ‘கோலுடை நறுவீ’, ‘வாகை வெண்பூ’,‘சுடர்வீ வாகை’, ‘துய்வீ வாகை’, ‘மென்பூ வாகை’ என்ற சிறப்புகளும் கருவாகைக்கும் பொருந்தும். இதன் மலர் பளபளக்கும் செந்நீல நிறமானது. இதனை இந்நாளில் ‘தூங்கு மூஞ்சி மரம்’ என்றழைப்பர். இதன் இலைகள் வாகை இலைகளைக் காட்டிலும் நீண்டு வேறுபட்டவை. இதன் கூட்டு இலைகளில் உள்ள பல சிற்றிலைகள் இரவில் அடிப்புறமாகக் கவிழ்ந்து ஒன்றையொன்று மூடிக் கொள்ளும். இவ்வியல்பினைத் தன் புகழ் கேட்ட மானமிக்க பெரியவர்கள் தலை குனிந்து மருளும் நிலைக்கு உவமிக்கின்றார்.

“தம்புகழ்க் கேட்டார் போல் தலைசாய்த்து
 மரம் துஞ்ச
-கலி. 119:6

என்று குறிப்பிட்டது இம்மரத்தின் இலைகளைப் போலும்!

கருவாகை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : காலிசிபுளோரே
தாவரக் குடும்பம் : லெகுமினோசி
தாவரத் துணைக் குடும்பம் : மைமோசாய்டியே