கேடுகெட்ட பன்றியும்கூட -- தேடிக் கிடைத்ததைச் சொந்தமென்று அடைத்துவைக்கும்; பாடுபடும் உனக்கு மட்டும் -- பாட்டின் (பாடு) பலன்இல்லை என்றுசொல்வோர். பாதக ரடா
நெற்றிநீர் நிலத்தில் விழவும் -- நிதம்
நெஞ்சுநோக வும்உடம்பு நெக்கு விடவும் பற்றிய பசிப்பிணி யோடு -- இங்கு பஞ்சுபடாப் பாடுபட்டு வஞ்சம் இன்றியே
் சிற்றெ றும்பைப் போலு ழைத்தாலும் -- நீ தேடியதில் பாத்தியதை செப்பக் கூடாதாம் மற்றவர்க்கே யாவும் சொந்தமாம் -- எனும் வம்பர் சொல்லை மிதித்திட மனம்தேறடா
(பாடு)
கஞ்சியின்றிச் சாவது யாரார்? -- பிச்சைக் காரராகி இரந்துண்டு மாள்வது யாரார்? கெஞ்சியே தவிப்பது யாரார்? - சற்றும் கேள்விமுறை யின்றிமோசம் போவது யாரார்? பஞ்சணையில் தூங்குவது யார்? -- தினம்
பாலமுதக் கொழுப்புற்று வாழுவது யார்? மிஞ்சுகின்ற வித்தி யாசத்தாள் -- வீணர் மேன்மையுறத் தொழிலாளர் வீழ்கிறாரடா
(பாடு)
சம்மா இருப்பவர் தமக்கும் -- பல சூழ்ச்சிகளால்
உழைப்போரைச்
சுரண்டு வோர்க்கும்
எம்மாதிரி இழிவாயினும் -- பலே எத்தராகிப் பிறர்பொருள் நத்து வோருக்கும்
ஜீ-5
65
65