பக்கம்:தமிழர் மதம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம் அ (உ) முற்காப்பு மாந்தன் வாழ்க்கை பல்வகைத் துன்பம் நிறைந்ததனால், அவற்றினின்று தப்புவதற்குத் தொன்று தொட்டுப் பாதுகாப்புத் தேடிக்கொள்ள வேண்டியதாயிற்று. உடமைகளையும் உயிரையும் காப்பதற்கு முன்பு காவற்காரனும் பின்பு அரசனும் ஏற்பட்டனர். ஆயின், மக்களால் தடுக்க முடியாத கொள்ளை நோய், பஞ்சம், கடுங்காற்று, பெருவெள்ளம் முதலிய துன்பங்களைத் தடுத்தற்கும் நீக்கற்கும், மாந்தரினத்திற்கு மேற்பட்ட சில மறைவான தெய் வங்களே ஆற்றலுள்ளவை யென்று கருதி, அனைவரும் அவற்றை வணங்கவும் வழிபடவும் தலைப்பட்டனர். அத்துன்பங்கள் அத் தெய்வங்களின் சீற்றத்தால் நேர்வன வென்றும் நம்பி, அவற் றிற்கு அஞ்சினர். ஆதலால், முற்காப்பு அச்சத்தை அடிப்படை யாகக் கொண்டதாகும். தீயும் பாம்பும் பேயும் என்று முள்ளன. கொள்ளைநோய், பஞ்சம் முதலியன ஒரோவொரு காலத்து நிகழ்வன. (ங) நன்றியறிவு புல்வேறு தீங்குகட்கும் அச்சங்கட்கும் பெரிதும் இடந்தரும் காரிருளைப் போக்கி, உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையா த உணவு தேடவும் இனத்தாருடன் உறவாடவும், பேரளவாக உத வும் கதிரவனையும் சிற்றளவாக உதவும் திங்களையும்; உண்ணக் காய்கனியும் தங்கத் தண்ணிழலும் குடியிருக்க உறையுளும் உத வும் பல்வகைப் பழுமரங்களையும்; இளமை முதல் முதுமை வரை எல்லார்க்கும் இன்னுயிர்த் தீம்பால் உதவும் ஆவையும்,இன்னோ ரன்ன பிறவற்றையும்; தெய்வமாகப் போற்றியதும் வணங்கிய தும் நன்றியறிவு பற்றியதாகும். அவ் வ கை வணக்கத்தைக் குறித்த காலந்தொறும் தொடர்ந்து செய்வது, மேன்மேலும் நன்மை பெறலைக் குறிக்கோளாகக் கொண்டதாகும். வணக்க மெல்லாம் படைப்பொடு கூடியதே. (ச) பாராட்டு இனத்தைக் காக்கப் பகைவருடன் புலிபோற் பொருதுபட்ட, உயிரீகி (பிராணத்தியாகி) யாகிய தறுகண் மறவனுக்கும்; மழை வருவித்தும், பழுக்கக் காய்ச்சிய பொன்னைக் கையிலேந்தியும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/24&oldid=1428871" இலிருந்து மீள்விக்கப்பட்டது