28 விசயன் வேண்டுதல் இமைப்பளவின் மூன்றுலகங் கொள்வதென் கையி லமைத்தனுவின் சந்தமையுங் கண்டாய்-சமைத்த திருநெடுங்தேர் பூட்டழித்த சேவடியாய் நீயென் பெருநெடுங்தே ரூரப் பெறின். 11 -பெருந்தேவர்ை. = * 8. மனுேன்மணியம் வழுதியின் வீரமொழிகள் (சீவக வழுதிக்கும் சேரமன்னனுக்கும் போர்முண்டது. அப்பொழுது வழுதி தன் படை வீரர்களைக் கூட்டுவித்து வீரவுரை யாற்றுகின்றன். :வேள்வித் தீயைவிட நாட்டுப் பற்ருல் எழும் சினத்தியே வானவர்க்கு உவப்பானது. அத் தீயினுக்கு நம் எதிரிகளே விறகாகட்டும். இன்று நீங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும் உங்கள் புகழை யுகங்தோறும் சொல்லிக்கொண்டே யிருக்கும். பாண்டியர் உரிமைப் பண்பினர்; அவர்தம் மானவுணர்வைத் தீண்டாதீர், சுதந்தரமே அவர்க்குயிராகும்; இதனைக் கனவிலும் மறவாதீர், என முரசொலி எல்லார்க்கும் எடுத்துரைக்கும். போரிற் படுங்காயங்கள் வெற்றித் திருமகள் தந்த முத்தங்களாகும். இது போர்க்குறிக் காயமன்று; புகழின் காயம். புண்ணன்று புகழின் கண், கம் பரம்பரையினர் நாடோறும் அனுபவிக்கும் சுதந்தரம் நம் முன்ைேர் தந்த தென எண்ணி யெண்ணி மகிழ்வர். உலகில் பிறந்தவரெல்லாம் பிறந்தார் எனப்படுவரோ ? புகழுடம்பு பெற்றவரே பிறந்தவராவர். காளை யெய்தும் புகழில் ஆயிரத்தில் ஒரு கூறுதானே எனக்கு வாய்க்கும் என்று அழுக்காறுங் கொள்ளுகின்றேன். அதல்ை எவரேனும் உயிர்க்கஞ்சுவோர் உளராயின் கூறுக; அவரைக் காப்பான இடத்தில் அமர்த்திவிடுவோம். எத்தனேயோ பெண்கள் அவர்கட்குக் காவலாக இருப்பர்’ என சயமபட விரவுணர்ச்சியை மூட்டின்ை.) வாைேர் உவக்குந் தி அந்தணர் வளர்க்குஞ் செந்தமுல் தன்னிலும் நாட்டபி மானமுள் மூட்டிய சினத்தி யன்ருே வானேர்க் கென்றுமே உவப்பு வந்தவிக் கயவர் நுஞ் சிங்தையிற் கொளுத்திய வெந்தழற் கவரே யிங்தன மாகுக 5