220
தமிழ்ப் பழமொழிகள்
பிச்சைச் சோற்றுக்குப் பஞ்சம் உண்டா?
பிச்சைச் சோற்றுக்குப் பேச்சும் இல்லை; ஏச்சும் இல்லை.
பிச்சைப் பாத்திரத்தில் கல் இட்டது போல. 16290
பிச்சைப் பாத்திரத்தில் சனீசுவரன் புகுந்தாற் போல.
பிச்சை புகினும் கற்கை நன்றே.
பிச்சை போட்டது போதும்; நாயைக் கட்டு,
பிச்சை வேண்டாம் தாயே; நாயைப் பிடி.
பிசினாரி தன்னை வசனிப்பது வீண், 16295
பிஞ்சிலே பழுத்தவன்.
- (பழுத்தாற் போல்.)
பிஞ்சிலே முற்றிய பீர்க்காங்காய்.
பிஞ்சு வற்றினால் புளி ஆகாது.
பிட்சாதிபதியோ, லட்சாதிபதியோ?
பிட்டு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும். 16300
பிட்டுக் கூடை முண்டத்தில் பொறுக்கி எடுத்த முண்டம்.
- (புட்டுக் கூடை.)
பிட்டுத் தின்று விக்கினாற் போல.
பிடரியைப் பிடித்துத் தள்ளப் பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைந்தானாம்.
பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?
பிடாரன் கைப் பாம்பு போல. 16305
பிடாரனுக்கு அஞ்சிய பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்,
- (எலியை உறவு கொள்ளும்.)
பிடாரியாரே, கடா வந்தது.
பிடாரியைப் பெண்டு கொண்டாற் போல்.
பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டவன் பேயன்.
- (பேயனானது போல்.)
பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுப்பது அரிது. 16310
- (ஓச்சன்-பூசாரி.)
பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்.
- (அழரி இட்டால்.)
பிடிக்கிற முலை அல்ல; குடிக்கிற முலை அல்ல.
பிடிக்குப்பிடி நமச்சிவாயம்.
- (நமஸ்காரம், துறைசைப்பக்கத்தில் வழங்குவது.)