பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தமிழ்ப் பழமொழிகள்



பிச்சைச் சோற்றுக்குப் பஞ்சம் உண்டா?

பிச்சைச் சோற்றுக்குப் பேச்சும் இல்லை; ஏச்சும் இல்லை.

பிச்சைப் பாத்திரத்தில் கல் இட்டது போல. 16290


பிச்சைப் பாத்திரத்தில் சனீசுவரன் புகுந்தாற் போல.

பிச்சை புகினும் கற்கை நன்றே.

பிச்சை போட்டது போதும்; நாயைக் கட்டு,

பிச்சை வேண்டாம் தாயே; நாயைப் பிடி.

பிசினாரி தன்னை வசனிப்பது வீண், 16295


பிஞ்சிலே பழுத்தவன்.

(பழுத்தாற் போல்.)

பிஞ்சிலே முற்றிய பீர்க்காங்காய்.

பிஞ்சு வற்றினால் புளி ஆகாது.

பிட்சாதிபதியோ, லட்சாதிபதியோ?

பிட்டு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும். 16300


பிட்டுக் கூடை முண்டத்தில் பொறுக்கி எடுத்த முண்டம்.

(புட்டுக் கூடை.)

பிட்டுத் தின்று விக்கினாற் போல.

பிடரியைப் பிடித்துத் தள்ளப் பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைந்தானாம்.

பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?

பிடாரன் கைப் பாம்பு போல. 16305


பிடாரனுக்கு அஞ்சிய பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்,

(எலியை உறவு கொள்ளும்.)

பிடாரியாரே, கடா வந்தது.

பிடாரியைப் பெண்டு கொண்டாற் போல்.

பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டவன் பேயன்.

(பேயனானது போல்.)

பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுப்பது அரிது. 16310

(ஓச்சன்-பூசாரி.)


பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்.

(அழரி இட்டால்.)

பிடிக்கிற முலை அல்ல; குடிக்கிற முலை அல்ல.

பிடிக்குப்பிடி நமச்சிவாயம்.

(நமஸ்காரம், துறைசைப்பக்கத்தில் வழங்குவது.)