தமிழ்ப் பழமொழிகள்
221
பிடிக்குப் பிடி நமஸ்காரம்.
- (செங்கற்பட்டு வைஷ்ணவ வழக்கு.)
பிடித்த காரியம் கடித்த வாய் துடைத்தாற் போல் வரும். 16315
பிடித்த கிளையும் மிதித்த கொம்பும் முறிந்து போயின.
பிடித்த கொம்பு ஒடிந்து மிதித்த கொம்பும் முறிந்தாற் போல ஆனேன்.
- (ஒடிந்து போக.)
பிடித்த கொம்பும் விட்டேன்; மிதித்த கொம்பும் விட்டேன்,
பிடித்த கொம்பை விடாதே.
பிடித்ததன் கீழே அறுத்துக் கொண்டு போகிறது. 16320
பிடித்த துன்பத்தைக் கரைத்துக் குடிக்கலாம்,
பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டு.
- (+ஆவாள்.)
பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்.
பிடித்தால் குரங்குப் பிடி பிடிக்க வேண்டும்; அடித்தால் பேயடி அடிக்க வேண்டும்.
பிடித்தால் சுமை; விட்டால் கூளம். 16325
பிடித்தால் பானை, விட்டால் ஓடு.
பிடித்தால் புளியங்கொம்பைப் பிடிக்க வேணும்.
- (புளியாங்கிளையை.)
பிடித்தால் பெரிய கொம்பைப் பிடிக்க வேணும்.
பிடித்தாலும் பிடித்தாய், புளியங்கொம்பை.
பிடித்து ஒரு பிடியும், கிழித்து ஒரு கிழியும் கொடுத்தது உண்டா? 16330
பிடித்துத் தின்றதைக் கரைத்துக் குடிக்கலாம்.
பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழிந்து எறிந்தால் சாணி மொத்தை.
- (சவட்டித் தேய்த்தால்.)
பிடி பிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?
பிடி யானையைக் கொண்டு களிற்று யானையை வசப்படுத்துவது போல.
பிடியில் அழகு புகுந்தால் வபன் அழகு ஆவாள். 16335
பிடிவாதம் குடி நாசம்.
- (குல நாசம்.)
பிடி விதை விளையும்; மடி விதை தீயும்.