பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வலியறிதல்

123


தம் அளவுக்கு மீறிய முயற்சியில் ஈடுபடும் ஒருவர், முடிவில் தாமே அழிந்து படுவார்; எதற்கும் ஒர் எல்லை உண்டு. அவ்வெல்லையைக் கடவாமல் முயற்சி செய்பவர் வெற்றி பெறுவர் என்பது கருத்து.

கொம்பர் - கொம்பு, மரக்கிளை; ஊக்குதல்-முயலுதல், மன எழுச்சி கொள்ளுதல்; இறுதி - முடிவு, 476

7.ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.

வருவாயின் அளவுக்குத் தக்கபடி பிறருக்குக் கொடுத்தல் வேண்டும். அவ்விதம் அளவறிந்து தருதலே, பொருளைப் பாதுகாத்து ஒழுகும் வழியாகும்.

ஆற்றின் அளவு அறிந்து ஈதலாவது, வருவாயுள் கால் பாகத்துக்கு மேற்படாமல் பிறருக்கு உதவி செய்தல்; ஆறு-வழி, இங்கே பொருள் வரும் வழி, வருவாய்; போற்றி-பாதுகாத்து; வழங்கும் நெறி-ஒழுகும் வழி, வாழும் வழி. 477

8.ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

சிறிதாக இருந்தாலும், செலவு வருவாய்க்கு மேற்படாமல் இருந்தால், அதனால் கெடுதியில்லை.

ஆகு.ஆறு - பொருள் வரும் வழி, வருவாய்; இட்டிதாயினும்- சிறிதாக இருந்தாலும்; இட்டிது-சிறிது; போகு ஆறு-பொருள் போகின்ற வழி, செலவு; அகலாக் கடை-(வரவுக்கு மேல்) விரிவு படாமல் இருந்தால். 478

9.அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

தனக்குள்ள பொருளின் அளவினை அறிந்து, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை, முதலில் வளம் பலவும் அமைந்தள்ளன போல தோன்றிப் பின்னர் இல்லாதனவாய், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய் விடும்.

உள-(வளம் பலவும் அமைந்து) உள்ளவை;: தோன்றாக் கெடும் - மறுபடியும் ஒரு காலத்தே தோன்றுதற்கு இல்லாதபடி, அடியோடு கெட்டொழியும். 479