பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொச்சாவாமை

139


பலப்பல தன்மைகளை உடையவராக இருந்தாலும், மனத்தில் மறதியை உடையவர்க்கு அவைகளால் பயன் இல்லை.

நன்கு-நன்மை; செல்வம் என்றும் பொருள் கூறலாம். 534

5.முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

வரத்தக்க இடையூறுகளை முன்னதாகவே அறிந்து காத்துக் கொள்ளாமல் கவலையற்று மறந்து இருப்பவன், அந்த இடையூறு நேர்ந்த பிறகு, தன் பிழையை நினைத்து வருந்துவான்.

இழுக்கியான்-மறந்திருப்பவன்; ஊறு-உற்ற காலத்தில், தேர்ந்த போது; இரங்கி விடும்-வருந்துவான்; பின்னூறு இரங்கி விடும் - என்பதற்குப் பின்னால் வரக் கடவதாகிய நூற்றுக் கணக்கான துன்பங்களால் வருந்த வேண்டி வரும் என்றும் பொருள கூறலாம். 535

6.இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்ப தில்.

எவரிடத்திலும், எந்தக் காலத்திலும், தவறாமல் காட்டும்படி மறவாமை ஆகிய குணம் ஒருவரிடம் பொருந்தியிருத்தல் வேண்டும். அவ்விதம் இருப்பின் அதற்கு ஒப்பான நற்குணம் வேறு ஒன்றும் இல்லை.

இழுக்காமை-மறவாமை; வழுக்காமை-தவறாமை; வாயின் - வாய்த்தால், பொருந்தியிருந்தால்; ஒப்பது-சமமானது. 536

7.அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

மறவாமை என்னும் கருவி கொண்டு, எதனையும் எண்ணிச் செய்தால், செய்வதற்கு அருமையானவை என்று எண்ணிச் செய்யாமல் விட்டு விட வேண்டிய செயல்களே இல்லை.

அரிய-அருமையானவை; பொச்சாவாக் கருவி-மற வாமை என்னும் ஆயுதம்; போற்றி-எண்ணி. 537