3 & O திருக்குறள் மென்பது 903. இல்லாள்கட் டாழ்ந்த வியல் பின்மை யெஞ் ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும் என்பது ஒருவன் தன்*பெண் சாதிக்குப் பயப்பட்டுவணங்கி நடக்கிற வன்', அப்படி நடவாமல் நல்லவர்களாய பெரியவர்களிருக்கிற சபையிலே போனால், அவனுக்கு எந்நாளும் நாணமுண்டா' மென்றவாறு. பெண் சாகிக்கு அஞ்சி நடக்கிறவனை யாரும் எண்ணார்கள் : அதனாலே யெல்லாக்குற்றமும் விளையுமென்பது. ЛН 9.04. மனையாளை யஞ்சு மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. என்பது o தன் பெண் சாதிக்குப் பயப்பட்டு நடக்கிறவனுக்குமறுமைப் பயனில்லை; அவனுடைய ஆண்மை சவுரியம் நல்லவர்களாலே கொண்டாடப்படா என்றவாறு. இல்லறம் செய்கிறத்துக்கு”த் தான் கர்த்தனல்லாத படியி னாலே மறுமைப் பயனில்லை யென்பது. காரியம் வல்லவனா னாலும். மனை பாளுக்கு அஞ்சுகிறத்தினாலே இகழ்வார்கள்' என்பது క్తిF 905 இல்லாளை யஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல் என்பது தன் மனையாளுக்குப் பயப்படுகிறவன், தான் தேடின பொரு ளேயானாலும், நல்லவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய் கிறத்துக்கு" எந்நாளும் அஞ்சுவான் என்றவாறு. நல்லாராகிறவர்கள்; தேவர்கள், அருந்தவர்கள், பெரியோர்கள்.
- முதல் *வ7ை: பெண் சாதியிடத்துத் தாழ்தற்கு ஏதுவாகிய அச்சம்-அச்சு நூல் 1. நானுதலைக்கொடுக்கும் - அச்சுநூல் 2. செய்கிறதற்கு 3. அஞ்சு கிறதனாலே 4. இவ் விறுதி வாக்கிபம் அச்சு நூலிலில்லை. 5. செய்தலை