ஜைன உரை
445
பார்த்தல் தானே தாக்கிவருத்தும் அணங்கு தன்னுடனே எதுத்து[1] வருத்தம் பண்ணிச் சண்டை பண்ணுகிறத்துக்குச்[2] சேனையையுங் கூட்டிக் கொண்டு வந்தாப் போலே[3] யிருக்கிற தென்றவாறு. ௨
1083. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு
என்பது (இதுவுமது)
கூற்றுவ னென்று சாத்திரத்தினாலே சொல்லுகிறத்தைப்[4] பண்டு கேட்டறிந்த தல்லாமல் கண்டறியேன்: இப்பொழுது கண்டறிந்தேன்; அதெப்படி யென்றால் *பெண்மையா யிருக்கிற ஶ்ரீயினுடைய பெரிய கண்களாயிருக்கு மென்றவாறு.*
பெண்மையாவது, நாணம் மடம் அச்சம் பயிர்ப் பென்னும் நான்கு குணங்களோடு கூடியது. பெண்மையால் இன்பம் பயத்தல் உண்டாயினும் துக்கம் பண்ணுகிறது வெகுவான படியினாலே கூற்றுவன் என்று கூறினான் ௩
1084. கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்
என்பது (இதுவுமது)
பெண்மை யென்கிற பெருமையை யுடைய இந்த ஸ்திரிக்குக் கண்கள் தம்மைக் கண்டவர்கள் பிராணனை யுண்ணத்தக்கதாக அமர்ந்தன[5] வென்றவாறு.
ஸ்திரீயினுடைய கண்கள் குணத்துக்கும் மென்மைக்கும் ஒவ்வாமற் பொல்லாதனவா யிருந்தன என்பதாம். ௪