450
திருக்குறள்
னாப் போலே[1] பார்த்துத் தன்னுள்ளே மகிழ்ந்து சிரிப்பாள் என்றவாறு.
மகிழ்கிறது இவளைப் புணர வேண்டு மென்பதாம்.[2] ௫
1096. உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொல்
ஒல்லை யுணரப் படும்
என்பது
தோழி சொல்லுகுற[3] வசனத்தை யறிந்த தலைமகள்[4] தன்னுள்ளே சொல்லியது.
புறத்தியிலே பிறத்தியார் போலக் கடின வசனங்களைச் சொன்னோம்[5]; உள்ளே பகையில்லாதவர் வசனத்தைக் குறையுடையவர்களாலே கொப்பென அறியப்படு மென்றவாறு:
கடுஞ்சொல்லாவது, இவ்விடம் காவல் மிகுதியுடையது[6]. புணர்ச்சிக்கு இடமல்ல, வரவேண்டா மென்பதாம். ௬
1097. செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போ னோக்கும்
உறாஅர் போன் றுற்றார் குறிப்பு
என்பது (இதுவுமது)
பிறகு சினேகம் பண்ண வேணு மென்று மனதிலே நினைத்து முந்திக் கடின வார்த்தைகளைச் சொன்னதும், கோபமான பார்வையும், பிறத்தியார் போலே யிருந்து *உறவாகிறத்துக்குக்[7] குறிப்பென்றவாறு*.
முன்னே கடின வசனஞ் சொன்னாரென்று பயப்பட வேண்டா மென்பதாம். ௭
1098. (அசையியற் குண்டாண்டோ ரேஎர்யா னோக்கப்
பசையினள் பைய நகும்