ஜைன உரை
451
என்பது, தன்னைப் பார்த்து மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது:
என் மேல் கோபம்போல் சொன்ன வார்த்தையைப் பொறுக்க மாட்டாமல் நான் பிரியம் வரத்தக்கதாகப் பார்த்த பார்வையை அவளறிந்து மனது சந்தோஷப்பட்டுத் தன்னுள்ளே நகையா நின்றாள்; நுடங்கிய இயல்பையுடையவளுக்கு அந்த நகையினாலே தோன்றுகின்ற தொரு நன்மைக் குறிப்புண்டு என்றவாறு.
அந்த நன்மைக் குறிப்பாவது, தன் மேலே தயையுடையவன் என்பதாம்.
1099. ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள
என்பது
தோழி மதியுடன் படுகிறவள்[1] தன்னுள்ளே சொல்லியது. முன்னறியாதார்போல் ஒருவரையொருவர் பொதுநோக்கத்தால் நோக்குதல், இக்காதலையுடையார் கண்ணேயுண்டா மென்றவாறு.
பொதுநோக்காவது, எல்லாரையும் ஒரு சரியாய்ப் பார்க்கிறதாம். புறத்திலே ஒருசரியாய்ப் பார்த்தாலும் உள்ளே காதலாரிட(த்திலே) யன்புண்டாமென்பது. ௬
1100. கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்க
ளென்ன பயனு மில
என்பது (இதுவுமது)
*முதல் *வரை 1098ஆம் குறட்குரை காகிதச்சுவடியில் இல்லை; அச்சு நூலினின் றெடுக்கப்பட்டது.
- ↑ மதியுடம்பாடு-குறிப்புரை காண்க.