ஜைன உரை
453
மருந்தாவது அதுகளுக்கு[1] மாறானதாம்; அப்படியல்லாமல் இந்த ஶ்ரீயாலே வந்த வியாதிக்கு இவள்தானே மருந்தானாள் என்றவாறு.
அவளைக் கண்டு வருந்திய வியாதிக்கு அவளைச் சேர்ந்து அந்த வியாதியைத் தீர்ந்தானாமெனபது ௨
1103. தாம் வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்
தாமரைக் கண்ணா னுலகு
என்பது நிரதிசய வின்பத்திற்குரிய நீ யிந்தச் சிற்றின்பத்திற்கு இச்சிக்கிறது தகாதென்ற பாங்கற்குச் சொல்லியது:
ஐம்புலன்களும் அனுபவிக்கிறத்துக்குத்[2] தான் விரும்பிய ஶ்ரீயினுடைய மெல்லிய தோளிலே துாங்குகிற[3] நித்திரையைப் போல வருத்தப்படாமல் பெறலாமோ, சிற்றின்பத்தைத் துறந்த யோகிகளால் எய்தப்பட்ட சொர்க்கலோக மென்றவாறு.
ஶ்ரீயினுடைய சுகம் எளிதாய் எய்தும்; சொர்க்கத்தை யடைகிறவர்கள், வெய்யிலும் குளிரும் பனியும் பசியும் நெடுங்காலம் பொறுத்து வருந்தியே அச் சுகத்தை யடைவர்கள் என்றவாறு. ௩
1104. நீங்கிற் றெண்உங் குறுகுங்காற் றண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றா ளிவள்
என்பது பாங்கற் கூட்டத்திறுதிக்கட் சொல்லியது:
தன்னை விட்டு நீங்கினாற் சுடும்: சேர்ந்தாற் குளிரும்; இப்படிப்பட்ட நெருப்பை எனக்குக் கொடுக்கிறத்துக்கு[4] இவள் எந்த உலகத்திலே தேடிக் கொண்டாளென்றவாறு.
அவளைக் கூடாத பொழுது துக்கப்படுகிறதனாலே அனலென்றும், சேர்ந்து மகிழ்வுற்றத்தினாலே[5] குளிர்ச்சி யென்பதுமாம். ௪