454
திருக்குறள்
1105. வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள்
என்பது தோழியிற் கூட்டத் திறுதிக்கட் சொல்லியது:
மெத்தவும் பிரியமான பொருள்களைப் பெறாமல் அவற்றின்மேல் விருப்ப முண்டான பொழுது அந்தப்பொருள் தாமே வந்து சுகத்தைப் பண்ணுமாறு போல, இன்பத்தைப் பண்ணும். எப்பொழுதும் பெற்றுப் புணர்ந்தாலும் பூவினை யணிந்த கூந்தலையுடைய ஶ்ரீ தோள்க ளென்றவாறு.
ஶ்ரீகளைப் புணரப் பின்னையும் ஆசையதி கமாமென்றவாறு. ௫
1106. உறுதோ றுயிர்தளிர்ப்பத் திண்டலாற் பேதைக்
கமிழதி னியன்றன தோள்
என்பது (இதுவுமது) தன்னைப் புணராமல் வாடுகிற என்னுயிர் அவளைப் புணர்ந்தபோதெல்லாம் துளுக்கிற[1] படியினாலே இந்த ஶ்ரீக்குத் தோள்கள் தீண்டத்தக்கதொரு அமுதத்தினாலே செய்யப்பட்ட தென்றவாறு.
துளுக்கிறதாவது[2] இன்பத்தினாலே மகிழ்கிறதாம். ௬
1107. தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு
என்பது இவளை நீ* மணந்து கொண்டு உலகோர் தமது
*குறிப்பு இந்தச் சுவடியில் பக்கம் 740 இல் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது1.
இதுவரையுந்தான் இந்தச்சுவடியில் இருக்கிறது
இனிவரும் பகுதிகள் : பாரதீயஞான பீடம் தமிழ்வரிசை நெ 1. தொகுத்தவர்: பேராசிரியர் அ. சக்கரவர்த்தி: உரையாசிரியர். கவிராஜபண்டிதர்; சாது அச்சகம், இராயப்பேட்டை சென்னை என்னும் நூலிலிருந்து நிறைவு செய்யப் பெற்றது
இரண்டு நூல்களுக்குமே பாட பேதங்கள் நிரம்ப இருக்கின்றன.