ஜைன உரை
483
1181. நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க் குறைக்கோ பிற
என்பது, முன்பு நாயகன் பிரிந்து போனதற்குச் சம்மதித்த நாயகி பிற்பாடு அதுபொறுக்க மாட்டாமற் பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது:
என்னை நயந்தவரை என்னிடத்திலே வைத்திருக்கப் பொறாமல் அவர் பிரிந்து போதற்கு உடன்பட்ட நான, அவர் பிரிந்து போனபிறகு அதுபொறுக்க மாட்டால் பசலையான என் இயல்பை யார்க்குச் சொல்வேன் என்றவாறு. ௧
1182. அவர்தந்தார் என்னுந் தகையா லிவர்தந்தென்[1]
மேனிமே லூரும் பசப்பு
என்பது, ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.
யான் பொறுத்துக்கொண்டிருக்கவும் இந்தப் பசலை நிறம் தன்னை உண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தால் என் உடம்பு மேலெல்லாம் பரவா நின்றது என்றவாறு. உ
1183. சாயலு-நாணு மவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையுந் தந்து
என்பது, அழகும் நாணும் அழியாமற் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது:
நாயகன் பிரிந்தவன்றே என் அழகையும் நாணத்தையும் தாம் வாங்கிக் கொண்டு, காம நோயினையும் பசலையையும் எனக்குத் தந்து போனார் என்றவாறு. ௩
- ↑ இவர் தந்து - மேற்கொண்டு