இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
484
திருக்குறள்
1184. உள்ளுவன் மன்யா னுரைப்ப தவர்திறமாற்
கள்ளம் பிறவோ பசப்பு
என்பது*, பிரிந்து போனவர் சொன்ன சொற்களை யான் மனத்திலே நினைக்கிறேன்; வசனத்தாலே சொல்லுகிறதும் அவர் நன்மைகளையே; இப்படிச் செய்யா நிற்கவும் பசலை வந்தது கள்ளமாயிருந்தது என்றவாறு.
யான் பொறுத்துக் கொண்டிருக்கவும் பசலை எப்படிவருகிறது என்பதாம். ௪
1185. உவக்காணெங் காதலர் செல்வா ரிவக்காணென்
மேனி பசப்பூர் வது
என்பது, காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்குச் சொல்லியது:
என்னுடைய நாயகன் பண்டு பிரிந்து உங்கே[1] போகவும் இங்கே என்மேனி பசலை யூர்கின்ற தன்றோ, இப்போதும் அப்படி யல்லாமல் வேறொன்றாமோ என்றவாறு.௫
1186. விளக்கற்றம்[2] பார்க்கு மிருளேபோற் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு
என்பது இதுவுமது.
விளக்கு அவிந்து வருகிறது பார்த்துக் கொண்டிருந்து இருள் வருகிறது போல், நாயகன் பிரிந்து போகிறது பார்த்துக் கொண்டிருந்து பசலை வரு மென்றவாறு. ௬