இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஜைன உரை
493
யான் விருந்தாக எதைச் செய்வேன் என்றவாறு.
விருந்து என்பது புதிதாய் வந்தவர்களுக்குச் செய்யு முபசாரம் அது கனவுக்கு ஒன்று காணாத படியினாலே யாது செய்வே னென்றாள். ௧
1212. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்
குயலுண்மை சாற்றுவேன் மன்
என்பது, தூது விட நினைத்தவள் சொல்லியது:
தூங்காம லிருக்கிற கயல்போலும் என் கண்கள் யான் இரந்தாற் றுஞ்சுமாயின், கனவினிடையே காதலரைக காணலாம்; கண்டால் அவருக்கு யான் வருந்தியிருக்கிற தெல்லாம் யானே விரியச் சொல்வேன் என்றவாறு.
தூதுவரோடு சொல்லி யனுப்பினால் சுருங்கச் சொல்ல வேண்டும் தான் சொன்னால் மனதில் உண்டான தெல்லாம் சொல்லலாம் என்பதாம். ௨