ஜைன உரை
495
ஒருகாலும் என்னைவிட்டுப் பிரியாதாரை நீ பொல்லாங்கு சொல்ல வேண்டா என்பதாம். அ
1219. நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்
என்பது
தமக்கு ஒரு காதலர் இல்லாத படியினாலே அந்தக் காதலரைக் கனவினாற் கண்டறியாத ஸ்திரீகள் தாம் அறிய நினைவில் வந்து கூடாத காதலரை அன்பிலர் எனநோவர் என்றவாறு ௯
1220. நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற்
காணார்கொ லிவ்வூ ரவர்
என்பது
இவ்வூரிலே இருக்கிற ஸ்திரீகள் நினைவிலே[1] நம்மை விட்டுப் போனார் என்று நம்முடைய காதலரைக் கொடுமை சொல்லா நிற்பர்; அவர் கனவின்கண் வருகிற தறியார் என்றவாறு.
கனவிலே கண்டறியாதவர்கள் நனவில் வந்தாலும் பிராணனை நிற்கப் பண்ணுகிற நாயகனைக்குறை சொல்லுவார்கள். ௰
ஆக அதிகாரம் ளஉஉ க்குக்குறள் சதஉளஉ௰
இப்பால் 123. பொழுதுகண்டிரங்கல்
என்பது, சாயங்காலம் வந்தது கண்டு தலைமகள் விசாரப்படுதலாம்.
1221. மாலையோ வல்லை மணந்தா ருயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது
என்பது[2]
மாலைப் பொழுதே! நீ முன்னாள்களிலே வந்த மாலையோ வென்னின் அல்லை; நாயகனைப் புணர்ந்து பிரிந்திருக்கிறவர்கள் உயிரைக் கொண்டுபோகிற கடைசிக்காலமாய் இருந்தாய்