496
திருக்குறள்
என்றவாறு. ௧
1222. புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல்
வன்கண்ண தோநின் றுணை
என்பது
மயங்கின மாலைப்பொழுதே! நீயு மெம்மைப்போல வாடின கண்களையுடையையா யிருந்தாய்: நின் காதலரும் என் காதலர் போல் வன்கண்ணரோ என்றவாறு.
மயங்குகிறதாவது, பகலும் இரவும் தம்முள் விரவியிருத்தலாம். கலங்குதலும் தோன்ற நின்றது. ௨
1223. பனியரும்பிப் பைதல்கொண் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்
என்பது
இந்த மாலைப் பொழுது, காதலர் என்னுடனே கூடியிருக்கிற நாளெல்லாம், எனக்குப் பயந்து வந்தது; இப்போது காதலர் பிரிந்த படியினாலே, பயப்படாமல் என்னைக் கொல்லுவதாகிய துன்பத்தை மேன்மேலும் உண்டாக்கிக் கொண்டு வருகின்றது என்றவாறு. ௩
1224. காதல ரில்வழி மாலை கொலைக்களத்
தேதிலர் போல வரும்
என்பது
காதலர் கூடியிருக்கிற போதெல்லாம் என் உயிர் தழைக்க வந்த மாலைப்பொழுது அவர் இல்லாத போது கொல்லுகிற கொலைக்களத்திலே கொலைஞர் வருமாறுபோல் வாரா நின்றது என்றவாறு. ௪