ஜைன உரை
519
கொள்ளார் என்பது பற்றி, அவர்பக்கல் போகாநின்றாய் அதுவும் அறிவில்லாமையாம் என்றவாறு. ௨
1293. கெட்டார்க்கு நட்டாரில் லென்பதோ நெஞ்சேநீ
பெட்டாங் கவர்பின் செலல்
என்பது இதுவுமது][1]
நெஞ்சே, என்னிடத்திலே நில்லாமல், நீ நினைத்தபடியே அவரிடத்திலே போதற்குக் காரணம் கெட்டவர்களுக்கு உறவின் முறையார் உலகத்திலே இல்லை என்னும் நினைவோ? அல்லாமல் உன் சுபாவமோ சொல்லுக என்றவாறு.
கெட்டதாவது - மனமழிவது[2] ௪
1294. இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மறறு
என்பது இதுவுமது
நெஞ்சே! நீ அவரைக் கண்ட பொழுதே இன்பம் அனுபவிக்க நினைக்கிறதல்லாமல் அவர் செய்த குற்றத்தை நினைத்து, அது தரும் வகை பிணங்கி நின்று பின்பு இன்பம் நுகரக் கருதாய்: அப்படிப்பட்ட உன்னோடு எண்ணுவார் யார்? யான் அது செய்யேன் என்றவாறு. ௪
1295. பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சும்
அறாஅ விடும்பைத்தென் னெஞ்சு
என்பது, வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது:
என் நெஞ்சு காதலரைச் சேராத நாள் அதற்கு வருத்தப்படும்; சேர்ந்தால், அவர் பிரிந்து போகப் போகிறார் என்றெண்ணி, அப்பிரிவிற்கு வருத்தப்படும்; ஆதலால் எந்நாளும் துக்கத்தையே யுடையது என்றவாறு. ௫