520
திருக்குறள்
1296. தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்
தினிய விருந்ததென் னெஞ்சு
என்பது இதுவுமது
என் நெஞ்சு ஈண்டிருந்தது. காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னோடு நினைத்தக்கால் அவ்வளவறிந்து என்னைத் தின்பது போலத் துன்பஞ் செய்தற்கே என்றவாறு. ௬
1297. நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாவென்
மாணா மடநெஞ்சிற் பட்டு
என்பது இதுவுமது.
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க மாட்டாத மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி என் பிராணனிலும் அதிகமாய் இருக்கிற நாணத்தையும் மறந்துவிட்டேன் என்றவாறு. ௭
1298. எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற
முள்ளு முயிர்க்காத னெஞ்சு
என்பது இதுவுமது
உயிர்மேலே ஆசையுடைய என்நெஞ்சு நம்மை இகழ்ந்து போனாரென்று அவரை நாமும் இகழ்ந்தோமானால் பிறகு நமக்கு இளிவாமென்று நினைந்து அவரையே நினையாநின்றது என்றவாறு. ௮
1299. துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
என்பது, உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைமகள்[1] சொல்லியது;
ஒருவருக்குத் துக்கம் வந்த காலத்து, அது தீர்த்தற்குத் தமக்கு உரித்தாயிருக்கிற நெஞ்சு துணையாகா விட்டால், வேறு துணையாவார் ஒருவருமில்லை என்றவாறு. ௯
- ↑ தலைமகன் - பரிமேலழகர். உணர்ப்பு வயின் வாராவூடல் - தீர்க்கமுடியு மாறு வராத (அதாவது தீர்க்க முடியாத) ஊடல்.