ஜைன உரை
523
இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு. ௬
1307. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொ லென்று
என்பது இதுவுமது.
இன்பத்தைக் கொடுக்கின்ற இந்தப்பிணக்கின் கண்ணே எனக்கொரு துன்பமும் உண்டாகா நின்றது. இனிப்புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதுதலான் என்றவாறு. எ
1308. நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்
காதல ரில்லா வழி
என்பது தலைமகன் கூற்று*
இவர் நம்முடைய நிமித்தமாக நொந்தார் என்று அந்த விசாரத்தை அறியும் அன்புடையார் இல்லாத போது, ஒருவர் விசாரப் படுகிறதனாலே என்ன பயன் என்றவாறு. ௮
1309. நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே யினிது
என்பது இதுவுமது
பிராணனுக்கு வேண்டியிருக்கிற நீரும் நிழலிலே இருந்ததானால் மெத்தவும் நன்றாய்ச் சீவனுக்குத் தாகத்தையடக்கும்; அதுபோலப் பிணக்கும் அன்புடையவர்களிடத்திலே நல்லதாம்: அன்பில்லாதவர்களிடத்திலே நன்றாகாது என்றவாறு. ௯
1310. ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்
கூடுவே மென்ப தவா
என்பது இதுவுமது.
தான் பிணங்கி இருக்கவும், அதனைத் தீராமல் சும்மா இருக்கிறவருடனே கூட வேணுமென்று, என் நெஞ்சு முயலுதற்கு ஏது, ஆசை மாத்திரமே என்றவாறு
*உணர்ப்பு வயின்வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது என்பது பரிமேலழகர் துறைக் குறிப்பு