பக்கம்:துன்பச் சுழல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுழலிலே பிறந்தான் 15

புதிய இடத்திலே அவனுக்கு அதிகமாகப் பிடிப்பு உண்டாகவில்லை. அவன் எல்லாவற்றிலும் புதுமை கண் டான். பெற்ருேரும் உற்ருரும் யாரும் இல்லாத அந்தச் சிறுவனுக்கு அங்குள்ள சிலர் அடிக்கடி பெற்ருேருடன் புகுவது கண்டு வியப்பாகவே இருந்தது. அவனுக்கு உல கம் ஒன்றும் தெரியாதே. பாவம், அவன் அந்த அனதை விடுதியையே உலகம் என்று எண்ணியிருந்தான். தாயும் இல்லை. தந்தையும் இல்லை. அந்த விடுதிப் பணியாளர் களே அவனுக்குத் தாயும் தந்தையுமாயினர். ஆனால், அதே இடத்தில் சில மாணவர்கள் அவர் தம் உற்ருருடன் உறவு கொண்டாடுவதைக் காண அவனுக்கு வியப்பாக இருந்தது. எனினும் தம்போன்ற அைைதப் பிள்ளைகள் சிலர் இருப்ப பதைக் கண்டு ஒருவாறு தேறியிருந்தான். ஆனால், இவன் அந்த அைைதப் பிள்ளைகளிலும் வேருனவன் என்பதை உணர கிண்ட நாள் செல்லவில்லை. அந்த அனுதைப் பிள்ளை களுக்குப் பிறந்த ஊர் உண்டு, பெற்ற தாய் உண்டு, உற்ற தந்தை உண்டு. எனினும் அவர்கள் இறந்த காரணத்தால் அப்பிள்ளைகள் அைைதகளானர்கள். இவனுக்கு ஊர் ஏது? பிறந்தது இலவச மருத்தகத்தே. பெற்ற தாய் உண்டு; பெற்றதாய் யார் என்று அறியாமுன் இறந்தாள். தந்தையே இல்லாத தனியன் இவன். இவன் ஒரு புது முறையில் அைைத அல்லவா அந்த விடுதியில் உள்ள பெரிய மாணவர்கள் அவனே, குலம் குடி ஒன்றும் இல்லாத வன் என்று பேசி ஏசினர். அவன் அைைதயானலும் அதிலும் ஒரு தனிப்பட்ட அைைத என்று இகழ்ந்தார்கள். திருட்டுத்தனமாகப் பெற்ற பிள்ளையைவிட்டு இறந்தவள் அவன் தாய் என்று பேசிக் கொண்டார்கள். அவனது வாழ்க்கையே மற்றவர்களுடையதைக் காட்டிலும் தனியாக அமைந்திருந்ததால் அவனேத் தனியன் என்றே வேடிக் கையாக அழைத்தார்கள். அது ஒரு வேடிக்கைப் பெயராக முதலில் இருந்தபோதிலும், பிறகு அந்தப் பெயரே அவ னுக்கு உரிய பெயராக அமைந்துவிட்டது. யார் இருக் கிருர்கள் அவனுக்குப் பெயர் இடுவதைப்பற்றிக் கவனித்துக் கொள்ள ? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:துன்பச்_சுழல்.pdf/16&oldid=580069" இலிருந்து மீள்விக்கப்பட்டது