பக்கம்:தென்மொழி, சுவடி1 ஓலை10 நவம்பர் 1963.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்மொழி 11


கின்றன. அந்த நான்கு மொழிகளுக்குள்ளும் சிறந்த தமிழ் தெற்கேதான் இருக்கிறது. அதனாலே பாண்டியனுக்கும் தென்னவன் என்று பெயர். தென்னாடு என்பதும் சிறப்பாகப் பாண்டிய நாட்டைத் தான் குறிக்கும். இந்தத் தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டதும் தெற்கே போகப் போகத்தான் தமிழ் திருந்திக் கொண்டே போகிறது. திருநெல்வேயில் ஒரு வாழக்குச்சொல் சொல்வார்கள். மிகவும் திருத்தமாகப் பேசுவதென்றால், "திருத்தக் கல்லுக்குத் தெற்கிட்டுப் பிறந்தவன்" என்பார்கள். ஆகவே இந்தத் தெற்கு என்பதற்குத் திருத்தம் என்ற ஒரு பொருள் இருப்பதைப் பார்க்கிறோம்.
வட ஆர்க்காட்டில் 'இழுத்து இடித்து உதைத்தான்' என் பதை 'இசுத்து இசுத்து ஓச்சான்' என்பர். திருநெல்வேலியிலே அப்படி வழங்காது. திருநெல்வேலியிலே கூடிய வரையிலே தூய தமிழில் பேசுகிறார்கள். தான் திருநெல்வேலி நாட்டுப்புறத்து மொழியை ஆராய்த்ததனால்தான் இந்தச் சிறந்த உண்மைகளைக் காணமுடிந்தது. நாட்டுப்புறத்திலேதான் இங்கு வழங்காத சில சொற்கள் கூடச் சிறப்பாக வழங்குகின்றன. எடுத்துக்காட்டாகத் 'துப்புரவு' என்பதற்கு இங்கே 'சுத்தம்' என்ற வடச்சொல்லைத்தான் வழங்குகின்றார்கள். அங்கே எல்லாம் துப்புரவாக இருக்கவேண்டும் என்ற சொல்லுவார்கள். வேறு எத்தனையோ சொற்களெல்லாம் இங்கே வழங்காத சொற்களாக இருக்கின்றன.
அதாவது அரிசி முதலிய உணவுப் பொருள்கள் நீண்ட நாள் இருந்து கெட்டுவிட்டால் 'காந்திவிட்டது' என்றுசொல்வார்கள். திருநெல்வேலியிலே வழங்கும் அந்தச் சொற்கள் எல்லாம் இந்தப் பக்கம் வழங்குவதில்லை, அதோடுகூட இங்கு விளையாத சில பொருள்களுக்கும் பெயர்கள் வழங்குகின்றன. காடைக்கண்ணி, குதிரைவாலி முதலிய சிறு பொருள்களை நான் இங்குக் காணவே இல்லை. மற்ற வரகு, சாமை முதலியவை இருக்கின்றன. இந்த இரண்டும் இல்லை. இனி விளைபொருள்கூடச் சில வடிவு வேறுபட்டவை, கருவி வேறுபட்டவை. வடிவு வேறுபட்டாலும், கருவிவேறுபட்டாலும் பெயர் வேறுபட்டிருக்கின்றன. இப்போது இங்கே மூங்கிலால் செய்யப்பட்ட முறம் இருக்கிறது. அங்கே சுளகு இருக்கிறது. திடிரென்று திருநெல்வேலி முழுகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு அழிந்துவிட்டால் துப்புரவென்ற சொல்லும் இந்தக் காடைக்கண்ணி குதிரைவாலி சுளகு என்ற சொற்களும் அடியோடு மூகிவிடும்.
இப்படியே குமரி நாட்டின் தெற்கே குறைந்தது ஈராயிரம் கல் தொலைவிலுள்ள ஒரு பெரிய நிலப்பரப்பு அமிழ்ந்துபோய் விட்டதனாலே உலக வழக்குச் சொற்களில் ஆயிரக்கணக்கான