இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சுரதாவின் தேன்.மழை #70 குட்டியைத் திருடிய குள்ளனைக் கண்டு சிங்கப்பூர் நகரமே சிரித்தது வியந்தது: ஓங்கி வளர்ந்த ஒமை மரத்தின் முதிர்பட்டை போன்ற முதலையின் தோலைப் பெற்றிட வேண்டிக் குற்றம் புரிந்த தழும்புத் திருடனைச் சாராயக் கள்வனை சிங்கை அரசு சிறையில் வைத்தது! அன்னவன் சிறையிலே அடைபட்டான் எனினும் - இருண்டவன் உள்ளம் இருந்ததா சிறையில்? உலகில் தீமை ஒழிந்ததா? உலகம் திருட்டை ஒழித்ததா? இல்லையே செய்தி : தினத்தந்தி (21-2-61)