இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாவின் தேன்மழை
20
மாவும் பழுத்திருக்கும்
மலரும் விழித்திருக்கும்
பூவின் மதுசுரக்கும்-கிளியே
போவா ரடிவழுக்கும்!
பச்சை மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர வங்கலங்கும்-கிளியே
நரியெலாம் ஊளையிடும்.
கல்லுரல் போன்றமுகம்
காட்டிடும் பன்றிகளை
மெல்லிய மான்தடுக்கும்-கிளியே
வேங்கைகள் வால்நிமிர்க்கும்.
அதிமது ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை போடுமடீ-கிளியே
பூங்குயில் கூவூமடீ!