இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21
காடு
காட்டின் சிறுநெருப்பு
காந்தள் மலர்ச்சிரிப்பாம்!
நாட்டின் பெருநெருப்பு-கிளியே
நம்பிக்கை மோசமடீ!
இலைகள் உதிர்ந்தமரம்
ஏந்தும் கிளைகளெல்லாம்
வலைநிழல் போன்றிருக்கும்-கிளியே
வறுமை நிலைகுறிக்கும்.
சிங்கம் புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும் திரியுமடீ-கிளியே
இயற்கை விடுதியிலே!