இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கல்வி செழித்தால் தாமரைப் பூவில் மதுவதிகம் தனித்தமிழ்ச் சொல்லில் சுவையதிகம் பாமரர் நெஞ்சில் இருளதிகம் படித்தவர் நெஞ்சில் தெளிவதிகம். கல்வி செழித்தால் கவிதைவரும் கற்பன கற்றால் திறமை வரும் செல்வம் திரண்டால் செழிப்புவரும் திறமை மிகுந்தால் புகழ்வளரும். உலகம் நினைவின் தொடராகும் உயிர்கள் கருவியின் கதையாகும் விலகும் நிலையே பிரிவாகும் விரும்பும் பொருளே சுவையாகும்.