இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாவின் தேன்மழை
26
அணிலின் சிறியவா லதுபோல் விளங்கும்
செந்தினைக் கதிரைத் தின்னும் மயிலே
நின்பகை கோடை நெருப்பு வெயிலே
நீயெதிர் பார்ப்பது நீருண்ட முகிலே!
ஒரேஒரு கேள்வி உனைநான் கேட்கிறேன்
ஆடுங் கலாபமே ! அருகில்வா; இதைக்கேள்
கருவுற்ற முகிலைக் கண்டதும் நீயோ
ஆடு கின்றனை ; அதுசரி தோகையால்
ஈர முகிலினை ஏன்விசிறு கின்றனை?
சுரந்திடும் ஊற்றுநீர் சுடுமென் றெண்ணி
விசிறுவார் உண்டோ ஒலை விசிறியால்?
அஃறிணை மயிலே ஆராய்ந்து பார்த்துச்
செய்வதைச் செய்தால் சிரிப்புக் கிடமிலை
என்பதை அறிக ! என்மனங் கவர்ந்த
நாட்டியப் பறவையே ! நன்குநீ
ஆட்டுக தோகையை ஆடுக நீயே !