இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதாவின் தேன்மழை
28
சங்கத் தமிழ்மதுரை-நகர்
தாண்டித் தவழ்ந்துவரும்
மங்கலத் தென்றலிலே-கரு
வண்டு மயங்குதடி
பொங்கி வழிந்திடுந்தேன்-அது
பூக்களின் வேர்வையடி
வெங்கனல் கோடையடி-இது
வேனில் பருவமடி !
பொரிபெrrரி யாய்மலரைப்-பசும்
புன்னை மரத்தினில்பார்
கரிகரி யாய்நிழலை-அதன்
காலடி சுற்றிலும்பார்
வரிவரி யாயலையை முழு
வட்டக் குளத்தினில்பார்
சரிசரி என்பவளே-சுவை
தரவரு வாய்மயிலே!
ஊட்டி வளர்ப்பவளே-உயிர்
ஒவியம் போன்றவளே
ஏட்டின் கவிதையைப்போல்-நகர்
எங்கும் புதுமையடி
காட்டுப் பறவையெலாம்-தமிழ்க்
காதல் புரியுதடி
வாட்டம் தவிர்த்திடடி-எனை
வந்து தழுவிடடி !