நல்ல சேனபதி 13
டியதே சர்க்கரை மன்ருடியாருக்குச் சிறப்புப் பெயராகி விட்டது. அன்று முதல் அவரை யாரும் பெயர் சொல்லி அழைப்பது இல்லை. நல்ல் சேனுபதி என்றே வழங்கினர்கள். அவர் குலத்தில் வந்த வழித் தோன்றல் களில் பலர், நல்ல சேனுபதிச் சர்க்கரை மன்ருடியார் என்ற பெயரோடு விளங்குகிருர்கள். -
நல்ல சேனபதி செய்த போரின் சிறப்பை ஒரு தனிப் பாடல் அழகாகச் சொல்லுகிறது.
ஆறெல்லாம் செந்நீர்;
அவனியெல்லாம் பல்பிணங்கள்: துTறெல்லாம் சோழன்
சுரிகுஞ்சி; வீறுபெறு கன்னிக்கோன் ஏவலினால்
காரைக்கோன் பின்தொடரப் பொன்னிக்கோன் போன
பொழுது. (செங்கீர்-இரத்தம். துாறு-புதர். சுரிகுஞ்சி-சுருண்ட தலைமயிர். கன்னிக்கோன்-கன்னியாகுமரிக்குத் தலைவனை பாண்டியன். காரைக்கோன்-கத்தக்காரையூர்த் தலைவ ரான சர்க்கரை மன்ருடியார். பொன்னிக்கோன்-காவிரிக்கு உரியவளுன சோழன். - - -
சோழனுடைய கலேயின் மீது மன்ருடியார் அம்பு தவழ்ந்து சென்றதாதலின், தாறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி' என்று பாட்டுச் சொல்கிறது. 'பொன்னிக் கோன் போனன் புகார் என்பதும் ஒரு பாடம்.) -