உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாச்சியப்பன் பாடல்கள்-1.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 நாச்சியப்பன் தமிழ் நடையும் கற்பவர் மனத்தை ஈர்க்கும் பெருஞ்சுவை யும் பொருந்திய சிறப்புடையது. அழகு கொழிக்கும் அப்பிள்ளைத் தமிழிலேயே எழிலின் உச்சமெனப் புலவர்கள் போற்றும் பாட்டு இதுவாகும். தொடுக்குங் கடவுட் பழம்பாடற் ருெடையின் பயனே நறைபழுத்த துறைத்திந் தமிழி னெழுகுநறுஞ் சுவையே யகந்தைக் கிழங்கையகழ்ந் தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற் கேற்றும் விளக்கே வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடு மிளமென் பிடியே யெறிதரங்க முடுக்கும் புவனங் கடந்துநின்ற வொருவன் றிருவுள் ளத்திலழ கொழுக வெழுதிப் பார்த்திருக்கு முயிரோ வியமே மதுகரம்வாய் மடுக்குங் குழற்கா டேந்துமிள வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்றபெரு வாழ்வே வருக வருகவே. சிறப்பு மிகுந்த இந்நூல்கள் யாவிலும், பாட்டுடைத் தலைவனைப் பிள்ளையாக வைத்துப் பேசுகின்ற நூலாசிரியர் கள், பிள்ளைப் பருவத்துச் செயல்களைக் காட்டிலும், அத் தெய்வங்கள் அல்லது பெரியார்களின் அரும்பெரும் செயல் களையே பெரிதும் பாடி வைத்திருக்கிரு.ர்கள். பிள்ளைத் தமிழில் பிள்ளையைப் பிள்ளை நிலையிலேயே முழுதும் வைத்துப் பாடினல் பொருத்தமாயிருக்குமே என நினைத்தேன். அதன் விளைவே இந்நூல். குருபரர் போன்ற அருளும் புலமையும் பெருகிய நிலை யினன் அல்ல என்ருலும், பொருளும் சிறப்பும் பொருந்தவே